போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று [01] கைது செய்யப்பட்டுள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்

அவர் இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

 நேற்றைய தினமும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

 வெளிநாட்டில் தங்கியிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று முன்தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் நேற்றைய தினம் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த மே மாதம் வழங்கிய போதனையின் போது, பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Update : Jerome Fernando produced on court 

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று மதியம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.