நாடாளுமன்றில் புகை குண்டுகளை வீசி தீ வைப்பு!

2024 வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசியும் தீ வைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பினர்.

உறுப்பினர் ஒருவர் தீயை பற்றவைக்க முயற்சித்த போது, சுற்றியிருந்த அரசியல்வாதிகளால் தீ அணைக்கப்பட்டது.

1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல் கம்யூனிஸ்ட் அதிபராக இருந்த முன்னாள் பிரதம மத்திரியும், ஜனநாயகக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான சாலி பெரிஷா ராமாவின் சோசலிஸ்ட் கட்சியைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாயடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.  

ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான அமர்வில் வரவு செலவு திட்ட முதல் வாக்கெடுப்பை நிறைவேற்றிய போது அறையில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு பெரிஷா செய்தியாளர்களிடம். "நாடாளுமன்றத்தில் பன்மைத்துவத்தை கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்." எனக் கூறியுள்ளார்.