ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தடையை நீக்க அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் - பிரசன்ன ரணதுங்க!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தடையை நீக்க அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் - பிரசன்ன ரணதுங்க!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மீதான சர்வதேச கிரிக்கெட் பேரவை தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக் கொள்கிறார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

எனவே இதனை தேசிய பிரச்சினையாக கருதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது அரசியல் தலையீடு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக கிரிக்இன்போ இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்தால், அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். 

எனவே, அதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.