திருகோணமலையின் பல பகுதிகளில் நில நடுக்கம்!

திருகோணமலையின் பல பகுதிகளில் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையின் பல பகுதிகளில் நில நடுக்கம்!

குறித்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

நில அதிர்வானது, 1.15 மணி அளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் ரொட்டவௌ, நாமல்வத்த, கோமரன்கடவல போன்ற பகுதிகளில் நடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

குறித்த நில நடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.