50 வீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரத்தை இழக்கும்..

50 வீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரத்தை இழக்கும்..

*கட்டண அதிகரிப்பால் 50%க்கும் அதிகமான குடும்பங்களில் மின் துண்டிக்கப்படும் அச்சம்!*

கட்டண அதிகரிப்பு காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் அச்சம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதன் இணை செயலாளர் இசுறு கஸ்தூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 6 மில்லியனுக்கும் அதிகமான மின்சார நுகர்வோர் உள்ளனர்.

அவர்களில் 50 சதவீதமானோர் மின் கட்டண அதிகரிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் இசுறு கஸ்தூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.