இலங்கை சிறையில் இருந்த 40  தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்த 40  தமிழக மீனவர்கள் விடுதலை!

பிரதமர் நரேந்திர மோடியின் ராமேஸ்வரம் விஜயத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
 
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் , நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.