உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி  வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிட்டன. இதன்போது. இந்திய அணி 90 பந்துகள் மீதமிந்த நிலையில் 8 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி  வெற்றி!

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத்தாடி 50 ஓவர்கள் நிறைவில்  8 விக்கட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது, ஹஷ்மதுல்லா ஷஹிடி 80 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய இந்திய அணி 35 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

இதன்போது, ரோஹித் சர்மா 84 பந்துகளில் அதிகூடிய ஓட்டங்களாக 131 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஆகக் குறைந்த பந்துகளில் சதம் கடந்த முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா தனதாக்கிக் கொண்டார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் 71 பந்துகளில் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சதத்துடன் அவர் மொத்தமாக 7 சதங்களை கடந்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.